Monday 22 October 2012

டிவிசனல் ரயில்வே மேனேஜருடன் திருச்சியில் முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு

  முத்துப்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே முன்பதிவு மையத்தை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்துதவ்ஹித் ஜமாத் போஸ்டர் ஒட்டியது ,டெலிகிராம் கொடுத்தது,எம்பி,எம் எல் ஏ விடம் கோரிக்கைவைத்தது என பல கட்ட நடவடிக்கைகளை செய்து வருகிரது
   அதன் தொடர்ச்சியாக இதன் பொருப்பு அதிகாரியான டிவிசனல் ரயில்வே மேனேஜர் அவர்களை சந்திக்க திருச்சி சென்றார்கள்   நாம்தவ்ஹித்ஜமாத் வந்து இருக்கிறோம் என்றதும் உடனே அனுமதி கிடைத்தது இதனுடைய அனைத்து புள்ளிவிபரங்களும் கொடுக்கப்பட்டது 19.10.2012 வெள்ளிகிழமை ஒருநாள்மட்டும் முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேசன் கலெக்சன் 65 ஆயிரம் என்பது உயர் அதிகாரிகளுக்கே நாம் சொல்லிதான் தெரிந்தது அனைத்தையும் ஆவலோடு கவனமாக கேட்ட ஏடிஆர் எம் அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்னும் இரண்டு நாளில்  நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பரீசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார்
   அகலரயில்பாதை பனிகளுக்காக ரயில்வே ஸ்டேசனை இடிக்கும் சூழ்நிலை  உறுவானால் ரிசர்வேசன் இங்கு தொடர்வது இயலாத காரியம் இதற்க்கு மாற்று ஏற்பாடாக உங்கள் தொகுதி எம்பிக்கு உள்ள கோட்டாவில் தனியாக போஸ்ட் ஆபிஸிலேயே ரயில்வே ரிசர்வேசனை தொடங்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்

    இந்த வழியையும் விட்டு விடாமல் அதற்க்கான முயற்ச்சியையும்  தவ்ஹித் ஜமாத் செய்துவருகிரது